
18 வயது இளையோர் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் சிலாங்கூர் மாநில அரசு அறிவித்துள்ளது.
வரும் 26ஆம் தேதி முதல் தொடங்கும் சிலாங்கூர் மாநில சட்டமன்ற கூட்டத்தில் இது திருத்தம் செய்யவிருப்பதாக ஆட்சிக்குழு உறுப்பினர் , முகமட் கைருடின் ஒத்மான் தெரிவித்தார்.
அச்சட்டத் திருத்தம் வாக்களிக்கத் தகுதிப் பெறுவோரின் வயது வரம்பை 21லிருந்து 18ஆகக் குறைக்கக் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15ஆம் தேதி திருத்தம் செய்யப்பட்டக் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஏற்ப உள்ளது.
இந்த அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் வாக்களிக்கத் தகுதிப் பெறுவோரின் வயதை 21லிருந்து 18ஆகக் குறைக்க வகை செய்யும் என்றார்.
