
தீயணைப்பு வீரர் முகமட் அடிப் காசிமின் மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவில் இடம் பெற்றிருக்கும் பட்டியலை அரசாங்கம் அறிவித்துள்ளது. சட்டத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ வான் ஜூனைடி இந்த பட்டியலை அறிவித்தார். உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின்; வீடமைப்பு மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் டத்தோஸ்ரீ ரீசல் மெரிக்கன் நைனா மெரிக்கன்; சட்டத்துறை தலைவர் டான்ஸ்ரீ இட்ரூஸ் ஹருன் மற்றும் முன்னாள் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி கமர்டின் ஹாஷிம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
