
வரும் 15ஆவதுப் பொதுத்தேர்தலில் பக்கத்தானின் சின்னத்தையே ஜ.செ.க. தொடர்ந்து பயன்படுத்தும் என்று அதன் தலைமைச் செயலாளர், லிம் குவான் எங் தெரிவித்தார். ஜ.செ.க.வின் சின்னத்தைப் பயன்படுத்த நாங்கள் ஆதரவளித்த போதிலும் பக்கத்தானின் சின்னத்தைப் பயன்படுத்தவே முடிவெடுத்துள்ளோம். இது இப்போது மலாக்காவில் தொடங்கப்பட்டுள்ளது. அதே போல் வரும் பொதுத்தேர்தலில் தீபகற்ப மலேசியாவின் அனைத்துப் பகுதிகளிலும் பயன்படுத்தப்படும் என்றார்.



