
வரும் காலத்தில் உலக தேசியப் பாரம்பரியத் தலமாக கோல கங்சார் பண்டார் டிராஜா உருவெடுக்க உள்ளதாக பேராக் மாநில வீடமைப்பு ஊராட்சி மற்றும் சுற்றுலாவுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர், டத்தோ நோலி அஸிலின் முகமட் ரட்சி தெரிவித்தார். இந்த மதிப்பீட்டிற்குப் பிறகு கோல கங்சார் நகரம் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியத் தலமாக உருவெடுக்கும். அதனால் கோல கங்சார் நகரை முன்கூட்டியே தேசியப் பண்பாட்டு நகராக மாற்ற தேசியப் பண்பாட்டுத் துறையுடன் மாநில அரசு பேச்சுவார்த்தை நடத்தியது என்றார்.



