31.4 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

கெடாவில் 4 இலக்கக் கடைகளுக்குத் தடை: மசீச, மஇகா, ஜிபிஎஸ் மௌனம் காப்பது ஏன்? லிம் குவான் எங் கேள்வி

🔥 Views : 7
👁 Reading Now : 31

கெடாவில் இயங்குகின்ற 4-இலக்கக் கடைகளை மூடுவதென அம்மாநில பாஸ் அரசாங்கம் முடிவெடுத்த நிலை குறித்து மசீச, மஇகா, ஜிபிஎஸ்(சபா கூட்டணி கட்சிகள்) ஆகிய கட்சிகள் கள்ள மௌனம் காக்காமல் வாய் திறக்க வேண்டும் என்று ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங் கேட்டுள்ளார். மலேசிக் குடும்பம் என்னும் கோட்பாட்டின்படி இதுதான் புதிய கொள்கையா என்று கேட்டுள்ள அவர், 4-இலக்கக் கடைகளும், மதுப் பழக்கமும் முஸ்லிம் அல்லாதாருக்குரியவை என்று தெரிவித்துள்ளார். பல இன கலாச்சாரம் கொண்ட மலேசியாவில், தொடர்ந்து எதிரான முடிவுகளை எடுத்துவரும் கெடா மந்திரி பெசாரின் இந்த புதிய முடிவு குறித்து இந்தக் கட்சிகள் தங்களின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும் என்றும் லிம் வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles