
வணக்கம், நான் பிரசாந்த் குமார் த/பெ பிரகாசம், 27 வயது. மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் ரிம் தொகுதியில் போட்டியிடுகிறேன். பக்கத்தான் ஹரப்பான் ஆட்சியில் மலாக்கா முதலமைச்சரின் சமூக விவகாரங்களுக்கான சிறப்புச் செயலாளராக பணியாற்றிய அனுபவம் எனக்கு இருக்கிறது. டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆசியோடு ரிம் சட்டமன்றத்தில் போட்டியிடுகிறேன். வரும் நவம்பர் 20 ஆம் தேதி நடக்கும் தேர்தலில் எனக்கு வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள். நான் ரிம் தொகுதி மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்குவேன் என்பதை உறுதி கூறுகிறேன் என்னை பற்றி மேலும் அறிந்து கொள்ள: https://angkatanmuda.com/prasanth-untuk-rim அகப் பக்கத்திற்கு வாருங்கள் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.



