
மலாக்கா மாநிலத்தில் பக்கத்தான் ஹரப்பான் 22 மாத ஆட்சியில் மஜ்ஸிட் தானா தெலுக் கோங் கடற்கரை பகுதியில் இந்தியர்கள் ஈமச்சடங்கு செய்வதற்கு 1.8 ஏக்கர் நிலத்தைப் பெற்று தனது தன்மானம் காத்தவர் மாண்புமிகு சாமிநாதன் என்று மலாக்கா மாநில இந்தியர்கள் பெருமையுடன் கூறுகிறார்கள் மேலும் மறக்காமல் இதில் சாலைகளில் தமிழ் எழுத்தை இடம்பெற இருக்கும் முக்கிய பங்காற்றியவர் சாமிநாதன் அவர். காடேக் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் சாமிநாதன் வெற்றிக்கு ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம் குலசேகரன், சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி, பெக்கோ சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ் இராமகிருஷ்ணன் மற்றும் சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் ஆகியோர் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.



