
சுமார் 8 ஏக்கர் நிலப்பரப்பளவில் கட்டப்படும் பைரம் தோட்டத் தொழிலாளர்கள் வீடமைப்புத் திட்டம் அடுத்த ஆண்டில் பூர்த்தியாகும் என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி தெரிவித்தார். 68 தோட்டப் பாட்டாளிகளுக்கு என்று கட்டப்படும் வீடுகள் மிகவும் தரமானவை. பினாங்கு மேம்பாட்டுக் கழகம் கட்டும் இந்த வீடுகள் தோட்டப் பாட்டாளிகள் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் என்று அவர் சொன்னார். இதனிடையே நேற்று பைரம் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கான டாக்டர் இராமசாமி தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



