
வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் 28 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளை வென்று மாநில அரசை தேசிய முன்னணி அமைக்க முடியும் என்று அம்னோ துணைத் தலைவரும் தேர்தல் இயக்குநருமான டத்தோஸ்ரீ முகமட் ஹாசான் தெரிவித்தார். இந்த தேர்தல் நடைபெறும் கால கட்டம் வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மற்றும் கடந்த 11 முதல் 14ஆவதுப பொதுத்தேர்தல் வரை தொடர்ச்சியாக தேசிய முன்னணியை தேர்வுச் செய்துக் கொண்டிருக்கும் வாக்காளர்கள் தரவின் அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டதாகும். ஒருவேளை 20 சட்டமன்றத் தொகுதிகளை வெல்ல நாங்கள் விரும்புகிறோம். இதில் ஏற்கனவே கடந்த 14ஆவது பொதுத்தேர்தலில் வென்ற 13 தொகுதிகளை நிலநிலைப்படுத்த முடியும் என்று அவர் சொன்னார்.



