
கிளந்தான், திரங்கானு மற்றும் கெடாவை ஆளும் பாஸ் அரசு பல சந்தர்ப்பங்களில் அதன் குறுகிய மற்றும் ஆழமற்ற மனப்பான்மையை வெளிப்படுத்தியுள்ளது. காலங்கள் மாறி வந்தாலும், அபத்தமான சூழ்நிலைகளிலும் அது தனது பார்ப்பனிய கடுமையான சிந்தனையில் சிக்கிக் கொள்கிறது. பெண்களை அடிபணியச் செய்வதில் பாஸ் கட்சி தீவிரமாக இருப்பது போல் தெரிகிறது, விருது பெற்ற விஸ்கி ‘TIMAH’ விற்பனைக்கு எதிராக ‘PAS’ தோல்வியுற்றது. அண்மையில் கெடா ‘மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமாட் சனுசி’ மாநிலத்தில் உள்ள அனைத்து ‘4D’ லாட்டரி எண் கடைகளின் விற்பனையை தடை செய்தார். லங்காவியின் சுற்றுலாத் தலத்தை மேம்படுத்த அரசாங்கம் மில்லியன் கணக்கில் செலவிட்டுள்ளது. ஆனால் கெடாவின் சமீபத்திய மாற்றத்தால், லங்காவி ஒரு வெறிச்சோடிய இடமாக மாற கூடும். ஆகவே இந்திய சமுதாயம் பாஸ் கட்சிக்கு எதிராக விழிப்புடன் இருக்க வேண்டும் என்று ஜோகூர் மாநில பெக்கோ சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ் இராமகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.



