
மலாக்கா மாநிலச் சட்டமன்றத் தேர்தல் கால கட்டம் முழுவதும் எஸ்.ஒ.பி.யை சுகாதார அமைச்சு எப்போதும் கண்காணித்துக் கொண்டிருப்பதாகச் சுகாதார அமைச்சர், கைரி ஜமாலுடின் தெரிவித்தார். தேர்தல் பிரச்சாரத்தில் முன்னாள் பிரதமர், டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கையும் நான் கண்காணித்துக் கொண்டிருக்கிறேன். அவர் தினமும் நிச்சயமாக என் கவனத்தில்தான் இருப்பார். இதுபற்றி நான் அமலாக்கத் தரப்பினரிடம் தெரியப்படுத்தி உள்ளேன் என்று அவர் சொன்னார்.



