
நாளை தொடங்கும் 2021 ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக உச்சநிலை நாட்டில் 500 பேராளர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்த கண்காட்சியில் 10,000 வருகையாளர்களை ஈர்க்க தாங்கள் திட்டமிட்டுள்ளதாக அதன் வர்த்தக மற்றும் தொடர்பு பிரிவு தெரிவித்துள்ளது. இரண்டு டோஸ் தடுப்பூசியைப் பெற்றவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதால் இந்த கண்காட்சியில் பங்கேற்பதற்கு முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளும்படியும் அது கேட்டுக் கொண்டது. சிப்ஸ் 2021 மாநாடு நாளை 18 முதல் 21 வரை கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கிறார்.



