
கோம்பாக் பத்துகேவ்ஸ் ஆடம்பர அடுக்கு மாடி குடியிருப்பில் 16 மாடியிலிருந்து 5 வயது சிறுமி கீழே விழுந்து மாண்ட சம்பவம் தொடர்பில் விசாரணைக்காக 36 வயது பெண்மணியை போலீசார் கைது செய்துள்ளனர். போதைப்பொருள் சம்பவம் தொடர்பில் இந்த பெண்மணி மீது ஏற்கெனவே ஐந்து புகார்கள் உள்ளன என்று கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் ஜைனால் முகமட் தெரிவித்தார்.



