
மலாக்கா மாநிலத்தில் புதிய அரசாங்கத்தை தேர்வு செய்யும் வகையில் வரும் சனிக்கிழமை நடைபெறும் தேர்தலில் 4 லட்சத்து 76,037 பேர் வாக்களிப்பார்கள் என்று மலாக்கா தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 28 சட்டமன்றத் தொகுதிக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது. காலையிலேயே வாக்களிக்க வரும் பாடி வாக்காளர்களை தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.



