
வரும் நவம்பர் 26 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவிருக்கும் சிலாங்கூர் மாநில பட்ஜெட்டில் பொருளாதார மீட்சியில் கவனம் செலுத்தப்படும் கடந்த 2020 ஆண்டிலும் இவ்வாண்டிலும் இழந்த வருமானத்தை ஈடு செய்வதற்காக பொருளாதாரத் துறைகளுக்கு புத்துயிரூட்டும் நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி குறிப்பிட்டார். கடந்த ஈராண்டுகளில் ஏற்பட்ட இழப்புகளைச் சரி செய்வதற்கு ஏதுவாக பொருளாதார நடவடிக்கைகளை விரைவுபடுத்துவற்கான செயல்முறைகளை நாங்கள் தயார் செய்யவுள்ளோம். மேலும் கல்விக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என்றார் அவர்.



