
கடந்த தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் போட்டியிட்டு தெப்ராவ் நாடாளுமன்ற தொகுதியில் ஸ்டிபன் சிம் வெற்றி பெற்றார். அதேசமயம் ஜூலாவ் நாடாளுமன்ற தொகுதியில் லேரி சிங் வெற்றி பெற்றார் இவர்கள் இருவரும் கெஅடிலான் இருந்து வெளியேறி சுயேட்சை வேட்பாளர்கள் என்று அறிவித்துக் கொண்டனர். மேலும் பெரிக்கத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கும் ஆதரவு வழங்கினர். இப்போது இவர்கள் இருவரும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்க முடிவு செய்துள்ளனர். அஸ்மின் அலி மற்றும் ஸூரைடா கமாரூடின் இல்லாமல் இவர்கள் இருவரும் புதிய கட்சி தொடங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
