30.1 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

ஜெய்பீம் பட சர்ச்சை: சூர்யா ஜோதிகா மீது போலீஸ் புகார்கள்

o

நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, போலீசில் பாட்டாளி மக்கள் கட்சி.யினர் புகார் அளித்தனர். சூர்யா நடிப்பில் வெளியான, ஜெய்பீம் திரைப்படம் ஒரு குறிப்பிட்ட சமுதாயம் இடையே கலவரத்தை துாண்டும் விதமாக அமைந்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக, பா.ம.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஜெய்பீம் திரைப்படத்தில் ஒரு சமூகம் குறித்த அவதுாறான காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இது புண் படுத்தும் விதமாக காட்சிகள் அமைந்துள்ளன. எனவே, படத்தின் இயக்குனர் ஞானவேல், தயாரிப்பாளர் ஜோதிகா, நடிகர் சூர்யா ஆகியோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் பாட்டாளி மக்கள் கட்சி யினர் வலியுறுத்தி வருவதால் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles