
அடிமட்ட உறுப்பினர்களின் கருத்துக்களைச் செவிமடுக்காமல் இருந்தால் வரும் 15ஆவதுப் பொதுத்தேர்தலில் பக்கத்தான் தோல்வியைத் தழுவும் என்று மலாயாப் பல்கலைக்கழக அரசியல் ஆய்வாளர், அவாங் அஸ்மான் பவி வலியுறுத்தினார். கட்சித் தாவும் வேட்பாளர்களை ஏற்றுக் கொள்வதைக் கட்சியின் அடிமட்ட உறுப்பினர்கள் எதிர்த்தனர். இருந்த போதிலும் கூட்டணித் தலைவர்களை அதைப் பொருட்படுத்தவில்லை. இது பக்காத்தான் அடிமட்ட உறுப்பினர்களின் உணர்ச்சிகளை பாதித்து விட்டது என்றார். ஆகவே அடிமட்ட உறுப்பினர்கள் உணர்வுகளுக்கு பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி மதிப்பளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



