
வணிகர் ஒருவரிடம் 20 லட்சம் வெள்ளி கையூட்டு பெற்றதாக ஊழல் வழக்கில் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் விடுவிக்கப்பட்டதும் அவர் மீதான மேல் முறையீட்டு மனுவை வாபஸ் பெற்றுக் கொண்ட அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தின் முடிவு அதிர்ச்சி அளிப்பதாக பக்கத்தான் ஹரப்பான் தலைவர்கள் மன்றம் அறிவித்துள்ளது. நீதித்துறை சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்று பக்கத்தான் ஹரப்பான் மற்றும் அரசாங்கம் இடையே செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்ததில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே துங்கு அட்னான் மீதான வழக்கில் அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தின் முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று பக்கத்தான் ஹரப்பான் அறிவித்துள்ளது.



