
மலாக்கா மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் மோசமான அடைவு நிலையைப் பதிவுச் செய்ததைத் தொடர்ந்து பெர்சத்துவின் 3 தலைவர்களுக்குப் பதவியிலிருந்து விலகும்படி தாம் நெருக்குதல் கொடுத்ததாகச் சமூக வலைத் தளங்களில் பரவியதை அதன் உச்சமன்ற உறுப்பினர், டத்தோஸ்ரீ முகமட் ரிடுவான் யூசோப் மறுத்தார். இந்த அறிக்கை என் மீது தீய நோக்கம் கொண்ட தரப்பால் வெளியிடப்பட்டதாகும். இது பெர்சத்து கட்சித் தலைமைத்துவத்தில் பிளவை ஏற்படுத்தும் நோக்கில் பொறுப்பற்றத் தரப்பினரால் பரப்பப்பட்ட அவதூறாகும். இத்தகைய அறிக்கையை வெளியிட்டதாகக் கூறப்படுவதை நான் உறுதியாக மறுக்கிறேன் என்று அவர் சொன்னார்.



