
முன்னாள் பிரதமர், டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு வீட்டைப் பரிசாகக் கொடுப்பதை அரசு நிறுத்த வேண்டும் என்று பக்கத்தான் ஹரப்பான் பெக்கோ செனா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ மாஃபுஸ் ஒமார் வலியுறுத்தினார். இதற்கு முதலில் 1980 முன்னாள் பிரதமர் பணி ஓய்வுச் சட்டத்தைச் (திருத்தம் 2013) மறு ஆய்வுச் செய்யப்பட வேண்டும். அரசு வழங்கியிருக்கும் இப்பரிசு நியாயமற்றதாகக் கருதப்படுவதற்குக் காரணம் மக்களின் சமூகநலனுக்குத்தான் அரசு முன்னுரிமைக் கொடுக்க வேண்டும். ஒருவேளை இப்பரிசு சட்டப் பிரிவின் அடிப்படையில் வழங்கப்படுவதாக இருந்தால் அப்பிரிவை அகற்றும்படி நான் கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.



