
பெரிக்காத்தானின் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் மலாக்கா மாநில அரசில் இணைய இருக்கிறார்களா இல்லையா என்பது குறித்து தேசிய முன்னணியின் தலைமைத்துவம் விவாதிக்கும் என்று முதல்வர், சுலைமான் மாட் அலி தெரிவித்தார். மத்திய அரசு நிர்வாகம் பெரிக்காத்தானுடன் ஒத்துழைப்பை மேற்கொண்ட போதிலும் மலாக்கா மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணித் தனித்துப் போட்டியிட்டதைக் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும். இதுகுறித்து நான் முன்கூட்டியே கூட்டம் நடத்திக் கட்சித் தலைமைத்துவத்துடன் விவாதிக்க வேண்டும். காரணம் இம்முறை தேசிய முன்னணித் தனித்துப் போட்டியிட்டது. மாறாக அரசில் அல்லது பெரிக்காத்தானில் அல்ல. அதனால் கட்சியின் தலைமைத்துவத்தின் எத்தகைய முடிவையும் நான் ஏற்றுக் கொள்கிறேன் என்றார்.



