
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மலாக்கா மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் தங்கா பத்து தொகுதி அம்னோ உறுபினர்களிடையே துரோக அம்சங்கள் காணபட்டதாகாதன் தலைவர், டத்தோஸ்ரீ முகமட் அலி முகமட் குற்றஞ்சாட்டினார். இவர்களில் சிலர் எதிர்கட்சி வேட்பாளர்களுக்கு உதவி செய்தது மட்டுமின்றி வாக்களிக்க வராமலும் இருந்துள்ளனர். இது கட்சியின் கொள்கையை மீறும் வகையில் உள்ளது. இத்தேர்தலில் நாம் வெற்றியைப் பதிவுச் செய்த போதிலும் தேர்தல் கால கட்டம் முழுவதும் கட்சிக்கு ஒருசில அம்னோ உறுப்பினர்கள் துரோகச் செயல்களைச் செய்துள்ளதாக எனக்குச் சில புகார்கள் வந்தன என்றார் அவர்..



