
யுனிசெல் எனப்படும் சிலாங்கூர் பல்கலைக்கழகத்தின் 2021 ஆண்டு நவம்பர் மாத கல்வித் தவணைக்கு 522 புதிய மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். பவுண்டேஷன் எனப்படும் அடிப்படை கல்வி, டிப்ளோமா மற்றும் பட்டப் படிப்பு ஆகிய துறைகளில் சேர்வதற்கு அம்மாணவர்கள் பதிவு செய்துள்ளதாக பல்கலைக்கழகத்தின் சந்தை மற்றும் மாணவர் சேர்ப்பு துறையின் இயக்குநர் இணைப் பேராசிரியர் டாக்டர் ஹஷிமா இஸ்மாயில் கூறினார். நவம்பர் மாத கல்வித் தவணைக்கான விண்ணப்ப தேதி வரும் டிசம்பர் 17ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் மாணவர் எண்ணிக்கை மேலும் உயர்வதற்கான சாத்தியம் உள்ளதாக அவர் சொன்னார்.



