
பக்கத்தான் ஹரப்பான் மற்றும் அரசாங்கம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு நடைமுறையில் இருக்கிறது. அந்த வகையில் கட்சி தாவல் தடுப்பு இயற்றுவதில் ஏன் தாமதம் என்று பெங்கேராங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அஸாலினா ஓஸ்மான் கேள்வி எழுப்பியுள்ளார். மாநில சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் விரைந்து இந்த சட்டம் இயற்றப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் கட்சி தாவல் தடுப்பு சட்டத்திற்கு கண்டிப்பாக ஆதரவு கிடைக்கும். ஆகவே கட்சித்தாவலை முறியடிக்க இந்த சட்டம் விரைந்து இயற்றப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.



