
போலீஸ்காரர்கள் போல் நடித்து ஆடவர் ஒருவரை கடத்தி பின்னர் அவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் நெகிரி செம்பிலான் லுக்குட் ஸ்பிரிங் ஹால் என்ற இடத்தில் ஆடவர் கடத்தி பின்னர் அவர் கொலை செய்யப்பட்டதாக போட்டிக்சன் மாவட்ட போலீஸ் தலைவர் அய்டி தெரிவித்தார். 38 வயதுடைய அந்த ஆடவர் காலை மணி 7.14அளவில் வீட்டிலிருந்து கடத்தி செல்லப்பட்டதாக அவரது மனைவி புகார் செய்ததாகவும் அவர் தெரிவித்தார். இதனிடையே கடத்திச் செல்லப்பட்ட அந்த ஆடவர் செர்டாங் மருத்துவமனையில் இறந்ததாக தெரியவந்தது. க் இதனை தொடர்ந்து போலீஸ் மேற்கொண்ட விசாரணையில் கோலாலம்பூரில் கெப்போங்கில் இருவர் கைது செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.



