
நாட்டில் 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 25 லட்சத்து 97 ஆயிரத்து 622 பேர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 27 லட்சத்து 58 ஆயிரத்து 317 இளையோர்கள் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியை பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இது தவிர, பெரியவர்களில் 2 கோடியே 24 லட்சத்து 13 ஆயிரத்து 570 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றுள்ள வேளையில் 2 கோடியே 29 லட்சத்து 30 ஆயிரத்து 251 பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



