
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் காடேக் தொகுதியில் போட்டியிட்ட ம இகா வேட்பாளர் பி. சண்முகம் 500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று மீரா கட்சியின் தேசிய தலைவர் கே.பி. சாமி தெரிவித்தார். இந்த தேர்தலில் காடேக் தொகுதி மக்களுக்கு மஇகா பல வாக்குறுதியை வழங்கி இருக்கிறது. மலாக்கா மாநில ஆட்சிக்குழுவில் இடம்பெறும் சண்முகம் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று கே பி. சாமி கேட்டுக் கொண்டுள்ளார். ஆட்சிக்குழு முலம் மலாக்கா மாநில இந்தியர்கள் எதிர்நோக்கியிருக்கும் அடிப்படை பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும் என்று கே பி. சாமி வலியுறுத்தியுள்ளார்.
