
கெட்கோ குடியேற்றக்காரர்கள் நிலப் பிரச்சினை தொடர்பாக பக்கத்தான் ஹரப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஆகியோரை சந்திக்கப் போவதாக பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி தெரிவித்தார். கடந்த நவம்பர் 18 ஆம் தேதி கெட்கோ குடியேற்றக்காரர்கள் என்னை சந்தித்து மகஜர் ஒன்றை வழங்கினார். கெட்கோ குடியேற்றக்காரர்கள் நிலப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுக்கான பக்கத்தான் ஹரப்பான் தலைவர்களின் கவனத்திற்கு இதை கொண்டு செல்லும்படி அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடினை சந்திக்கப் போவதாக டாக்டர் இராமசாமி குறிப்பிட்டுள்ளார்.
