
அம்பாங்கில் ஒருசில பகுதிகளில் ஏற்பட்டத் திடீர் வெள்ளம் குறித்த அறிக்கை அடுத்த வாரம் நடைபெறும் ஆட்சிக்குழு கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என்று மந்திரி புசார், டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். இத்திடீர் வெள்ளம் ஏற்பட்டதற்கு உண்மையானக் காரணத்தைக் கண்டுபிடிக்கும் பொருட்டு அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் மற்றும் சம்பந்தப்பட்ட அமைப்புகளிடமிருந்து முழு அறிக்கையை மாநில அரசு கோரும். அதனால் இதுபோன்ற சம்பவம் மீண்டும் ஏற்படாமல் இருக்க அப்பகுதியின் ஆற்றுக்கு அருகில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருப்போர் மற்றும் அம்பாங் இண்டேக் தண்ணீர் சுத்திகரிப்பு ஆலையும் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.
