
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் கண்ட தோல்வியில் இருந்து நாம் எழுச்சி பெறுவோம் என்று பக்கத்தான் ஹரப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்தார். இதற்கு முன்னர் ஜொகூர் மற்றும் சுங்கை பெசார், கோலகங்சார் தேர்தலில் தோல்வி கண்டோம். ஓராண்டுக்குப் பின்னர் நடந்த தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றி பெற்றது. அந்த வகையில் மலாக்காவில் கண்ட தோல்வியால் இருந்து நம்மால் எழுச்சி பெற முடியும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
