
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் தோல்வி அடைந்ததற்கு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பதவி விலக வேண்டும் என்று கோருவதில் நியாயம் இல்லை. வரும் பொதுத்தேர்தலில் பக்கத்தான் ஹரப்பானை அவர் தொடர்ந்து வழிநடத்த வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழ உறுப்பினர் வீ கணபதி ராவ் கேட்டுக் கொண்டுள்ளார். நோய்த்தொற்று பாதிப்பை காரணம் காட்டி மூத்த குடிமக்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள மலாக்காவினர் வாக்களிக்க வரவில்லை. இதுவும் பக்கத்தான் ஹரப்பான் தோல்விக்கு ஒரு காரணம் என்று அவர் சொன்னார். தோல்வியில் இருந்து பக்கத்தான் ஹரப்பான் எழுச்சி பெற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
