
சிலாங்கூர் மாநில 2022 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் காச நோய் சிகிச்சைக்கு எட்டு லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது. காச நோயின் அபாயம் குறித்து சிலாங்கூர் மாநில மக்கள் மத்தியில் இன்னும் போதுமான அளவு விழிப்புணர்வு இல்லை என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். அடுத்தாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் இந்த நிதியின் மூலம் மாநிலத்திலுள்ள சுமார் 1,000 காசநோயாளிகளுக்கு முறையான சிகிச்சை வழங்க முடியும் என்று அவர் சொன்னார்.
