
சிலாங்கூர் மாநில 2022 பட்ஜெட்டில் மாணவர்கள் டியூஷன் திட்டத்திற்கு 70 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். நடப்பு கோவிட்-19 பெருந்தொற்றைக் கருத்தில் கொண்டு ஹைப்ரிட் எனப்படும் மாணவர்கள் நேரடி பங்கேற்பு மற்றும் இயங்கலை என இரு வழிகளில் இந்த வகுப்புகள் நடத்தப்படும் என்று அவர் சொன்னார்
