
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் தோல்வி அடைந்ததற்கு மலாய்க்காரர்கள் ஆதரவை இழந்து விட்டது உண்மையே என்று அமானா கட்சியின் தேசிய தலைவர் மாட் சாபு தெரிவித்தார். இந்த தோல்வியானது பக்கத்தான் ஹரப்பான் மீண்டும் எழுச்சி பெறுவதற்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. ஆகவே வரும் பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பக்கத்தான் ஹரப்பான் மீண்டும் எழுச்சி பெற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
