
ஈப்போ மாநகரத்தில் ஜவுளி தொழில் துறையில் புகழ் பெற்ற வணிகரின் தாயாரின் இறுதிச்சடங்கில் ஹெலிகாப்டர் மற்றும் குதிரைகள் பயன்படுத்தப்பட்டது தொடர்களில் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ மியோர் தெரிவித்தார். இறுதி ஊர்வலத்தில் ஹெலிகாப்டர் மூலம் பூக்கள் கொட்டப்பட்டன. மேலும் குதிரைகளும் அணிவகுத்து வந்தன. ஹெலிகாப்டர் மற்றும் குதிரைகள் பயன்படுத்துவதற்கு முறையாக அனுமதி பெறப்பட்டதா என்பது தொடர்பில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்றார் அவர்.
