
செந்தோசா சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும் சிலாங்கூர் மாநில மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரியுமான டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தலைமையில் நேற்று செந்தோசா சட்டமன்ற தொகுதி சேவை மையத்தில் நேற்று விமர்சையாக நடைபெற்றது. டிரைவ் துரு முறையில் பொதுமக்களுக்கு சுவையான உணவு வகைகள் வழங்கப்பட்டன. ஏராளமான மக்கள் எஸ்ஓபி விதிமுறைகளை பின்பற்றி இந்த பொது உச்சரிப்பில் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினர். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தனது தொகுதியில் உள்ள மக்களுக்கு உதவி புரிந்து வசதி குறைந்த மக்களுக்கும் பல வகைகளில் பேருதவி புரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
