
பத்தாங் காளி வட்டாரத்தில் பூ மற்றும் அச்சகம் வியாபாரம் நடத்தி வரும் குடும்பமாது ரேகாவுக்கு சிலாங்கூர் மாநில சித்தம் அமைப்பின் மூலம் உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன. ரேகாவின் வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய ஏதுவாக சிலாங்கூர் மாநில அரசின் சித்தம் திட்டம் வாயிலாக 5,500 வெள்ளி பெருமானம் உள்ள பொருட்கள் வழங்கப்பட்டிருப்பதாக சித்தம் அமைப்பின் நிர்வாகி தீபன் சுப்பிரமணியம் தெரிவித்தார். அவர் இத்துறையில் மென்மேலும் முன்னேர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அவர் சொன்னார்.
