
நாட்டில் இதுவரை 2 கோடியே 25 லட்சத்து 4 ஆயிரத்து 497 பெரியவர்கள் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2 கோடியே 30 லட்சத்து 44 ஆயிரத்து 851 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனிடையே, 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 27 லட்சத்து 76 ஆயிரத்து 260 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ள வேளையில் 26 லட்சத்து 64 ஆயிரத்து 877 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.
