
பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக்கு தொடர்ந்து தலைமை தாங்குவதற்கு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மிகவும் தகுதியானவர் என்று பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி. பிரபாகரன் தெரிவித்தார். மலாக்கா மாநிலத்தில் போட்டியிட்ட 28 இடங்களில் ஐந்தில் மட்டுமே பக்கத்தான் ஹரப்பான் வெற்றி பெற்றது. இதனால் டத்தோஸ்ரீ அன்வார் எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று கூறுவதில் அர்த்தமில்லை. இன்று அனைத்துலக அளவில் மிகவும் பிரபலமான தலைவர் அன்வார்தான். டத்தோஸ்ரீ அன்வாரை விட அதிக திறமையும் செல்வாக்கும் கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் வேட்பாளர் யாரும் இல்லை என்பதை பலர் ஒப்புக்கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன் என்று அவர் சொன்னார்.
