
அம்பாங், லெம்பா ஜெயாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 260 குடும்பங்களுக்கு உதவ சிலாங்கூர் மாநில அரசு 260,000 வெள்ளியை ஒதுக்கியுள்ளது. அடிப்படை உதவிகள் உள்பட தலா 1,000 வெள்ளி சம்பந்தப்பட்ட குடும்பங்கள் எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் கழகத்திடமிருந்து பெறுவார்கள் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். இயற்கை பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு அவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் உதவிகளை வழங்க மாநில அரசு தயாராக உள்ளது என்று அவர் சொன்னார்.
