
அடுத்தாண்டு முதல் ஷா ஆலமில் உள்ள ஜூப்ளி பேராக் அரங்கத்தை மையமாக கொண்டு மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்புச் சந்தையை நடத்த சிலாங்கூர் மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நடைமுறை எளிதானதாக இருக்கும் என்பதோடு பொதுமக்கள் ஒரே இடத்தில் தங்கள் கவனத்தை செலுத்துவதற்குரிய வாய்ப்பினையும் வழங்கும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓஸ்மான் தெரிவித்தார்.
