
காய்கறிகள் உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுத் தொடர்பாக எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் 14 இடங்களில் எதிர்ப்புப் பேரணியை அமானா இளைஞர் பிரிவு மற்றும் போக்குவரத்துக் குழுவும் நேற்று நடத்தின. இப்பேரணி நேற்று மாலை 5.00 மணிக்குத் தலைநகரின் சோகோ பேரஙகாடியிலும் நடத்தப்பட்டதில் 20 பேர் கலந்து கொண்டனர். தற்போது நாட்டில் காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி இருக்கிறார்கள்.
