
கோவிட் 19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழக மக்களுக்கு உதவும் வகையில் ம இ கா இன்று தனது உதவிகளை வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட தொப்புள் கொடி உறவுகளுக்கு மருந்து மற்றும் சுவாசக் கருவிகள் வாங்குவதற்கு உலகத் தமிழர்களே உதவுங்கள் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இவரின் கோரிக்கை ஏற்றுக் கொண்டு மஇகா கட்சி மலேசிய இந்தியர்கள் சார்பில் மருத்துவ உதவியை வழங்குகிறது என்று அதன் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் மற்றும் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தனர்.
