
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு ஜூன் மாதம் வரை நாட்டில் 1,497 ஒப்பந்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் வேலையை ராஜினாமா செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டில் 110 பேர், 2018 இல் 168 பேர், ,2019 இல் 475 பேர், 2020 இல் 511 பேர் மற்றும் இவ்வாண்டில் ஜூன் மாதம் வரை 514 பேர் வேலையை ராஜினாமா செய்திருப்பதாக சுகாதார அமைச்சின் துணை அமைச்சர் டத்தோ டாக்டர் நூர் அஸ்மி கஸாலி தெரிவித்தார்.



