
உலகை மிரட்டி கொண்டிருக்கும் ஒமிக்ரோன் எனும் புதிய வைரஸ் உறுதிச் செய்ய அனைத்துலக நுழைவாயில்களில் கண்காணிப்பு நடவடிக்கைகளைச் சுகாதார அமைச்சு தீவிரப்படுத்தும் என்று அமைச்சர், கைரி ஜமாலுடின் தெரிவித்தார். ஒரு மாதத்திற்கு 1,500 மாதிரி சோதனைகள் சுகாதார அமைச்சு உயர்த்தியுள்ளது. இந்த வைரஸ் கிருமி தொடர்பில் சோதனை நடவடிக்கைகளை அதிகரிக்க ஒதுக்கீட்டுத் தொகையை உயர்த்தும்படி அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் சொன்னார்.
