
தடுப்புக் காவல் கைதி கணபதி மரணம் தொடர்பில் செய்தியை வெளியிட்ட மலேசியக் கினி நிருபர்கள் விசாரிப்பது குறித்து மலேசிய அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கண்டித்துள்ளது.
கணபதிக்கு என்ன நேர்ந்தது. அவரின் மரணம் தொடர்பில் நீதி கேட்க அவரின் குடும்பத்துக்கு உரிமை உண்டு.
கணபதிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று அம்னெஸ்டி கோரிக்கை விடுத்துள்ளது.
மரணம் அடைந்த கணபதி தொடர்பில் செய்திகளை வெளியிட ஊடகங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று அது கேட்டுக் கொண்டுள்ளது.
