
பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புக்கு மேலும் ஒரு சிறப்பு ஆலோசகர் நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதார துறை தொடர்பில் இவர் பிரதமருக்கு சிறப்பு ஆலோசகராக இருப்பார். ஏற்கனவே மனித உரிமை சட்டத்துறை மற்றும் சமய விவகாரம் தொடர்பில் பிரதமருக்கு இரு ஆலோசனைகள் இருக்கிறார்கள். இப்போது சுகாதார துறை தொடர்பில் மூன்றாவது ஆலோசகர் நியமிக்கப்படவுள்ளார் என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோ டாக்டர் அப்துல் லத்திப் தெரிவித்தார்.



