
கோலாலம்பூரில் பெரும்பாலான சாலைகள், கட்டடங்களின் பெயர் ஆங்கிலத்தில் இருப்பதால் அது லண்டனைப் போல் ஆகி விட்டதாக பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ முகமட் நஸ்ரி தெரிவித்தார்.
இங்கு சாலைகள், கட்டடங்கள் மட்டுமின்றி ஒருசில வீடமைப்புப் பகுதிகளிலும் அண்மையக் காலமாக ஆங்கில மொழியில்தான் பெயரிடப்படுகின்றன.
நாட்டின் ஒவ்வொரு மேம்பாட்டுத் திட்டங்களும் நிச்சயமாக அமலாக்கத் தரப்பினரின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்ட போதிலும் இந்நிலை எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை என்றார் அவர்.
