
கோழி இறைச்சி விலை இன்னும் சில நாட்களில் உள்நாட்டு வாணிபப் பயனீட்டாளர் விவகார அமைச்சு நிர்ணயித்து விடும் என்று அதன் அமைச்சர், டத்தோஸ்ரீ அலெக்ஸாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார். இவ்விவகாரம் தொடர்பில் கோழிப் பண்ணையாளர்களுடன் இணைந்து கலந்துரையாடல் நடத்தியதில் விலையை நிர்ணயிப்பதற்கு நடப்புச் சட்டப்படி அவர்கள் உத்தரவாதம் அளித்திருக்கின்றனர். இன்னும் சில தினங்களில் கோழி இறைச்சி விலை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
